சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை – இரஷ்யா இடையே, புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது, மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், ரூ. 10 இலட்சம் கோடி மதிப்பிலான, 360 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதில், இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மட்டும், 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் சென்னை துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்து துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இரஷ்யாவில் இருந்து சென்னைக்கு புதிய சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரஷ்யாவில் இருந்து இரும்பு உருக்குவதற்கான நிலக்கரி, இயற்கை எரிவாயு, உரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் கன்டெய்னர்களை கையாளும் வகையில், இந்த சரக்கு கப்பல் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. இரஷ்ய அதிகாரிகளும், சென்னை, எண்ணுார் துறைமுகங்களை நேரில் வந்து பார்வையிட உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Tags: ship
ShareTweetSendShare
Previous Post

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

Next Post

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies