விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணி அபார வெற்றி!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணி அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியாக தமிழகம் மற்றும் பெங்கால் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி வீரர்கள் தமிழக பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

குறிப்பாக தமிழக வீரர் நடராஜனும் சந்திப் வாரியரும் ஜோடி சேர்ந்து அபாரமாக பந்து வீசி பெங்கால் அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தனர்.

குறிப்பாக நடராஜன் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது தன்னுடைய பழைய ஸ்டைலில் பந்து வீசி எதிரணி வீரர்களை தெறிக்க விட்டார். நடராஜன் பந்துகளை தொட முடியாமல் பெங்கால் வீரர்கள் தடுமாறினர்.

நடராஜன் 5 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்திப் வாரியர் 7 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைப் போன்று சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பாபா அப்ரஜித் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

பெங்கால் அணி 23.4 ஓவர்களில் எல்லாம் 84 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சபாஷ் அஹமத் 20 ரன்கள் சேர்த்தார். இதனை எடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியும் தடுமாறியது.

சாய் சுதர்சன் 8 ரன்னிலும் பாபா அப்ரஜித் 4 ரன்களும், விஜய் சங்கர் 2 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 3 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.

எனினும் தொடக்க வீரர் நாராயண ஜெகதீசன் அபாரமாக விளையாடி 45 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இறுதியில் பாபா இந்திரஜித் 17 ரன்களும், ஷாருக்கான் 9 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றனர்.

இதனால் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

Tags: Crickettamil cricket team
ShareTweetSendShare
Previous Post

தலைவர் 171 – யில் இணையும் சிவகார்த்திகேயன்?

Next Post

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும்! – பியூஷ் கோயல்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies