உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!
Jul 25, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 5.30 மணி அளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆகர் இயந்திரத்தின் மூலம் சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெற்றது. துளையிடும் பணி சீராக சென்றதால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை பிறந்தது.

ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.

இதனிடையே தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், ஆக்ஜிசன் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன.

இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சரை நாள்தோறும் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரித்துப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆகர் இயந்திரம் பழுதானதால், செங்குத்தாக துளையிட்டு (vertical drilling) 41 உழியர்களை மீட்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஒருபுறம் செங்குத்தாக துளையிடும் பணியும் நடைபெற்று வந்தது.

மறுபுறம் ஆகர் இயந்திர பிளேடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வந்தது. அதற்கு நேற்று முதல் நல்ல பலன் கிடைக்க தொடங்கியது. ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த துளையில் பைப் சொருகும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், உள்ளே சிக்கி இருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக இன்று மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்த ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீட்கப்படும் தொழிலாளர்கள் சில்க்யாராவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

அங்கு 41 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய தனி வார்டு தொழிலாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் டூ கடற்கரை இரயில் இரத்து – என்ன காரணம்?

Next Post

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies