உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!
Jun 15, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 5.30 மணி அளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆகர் இயந்திரத்தின் மூலம் சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெற்றது. துளையிடும் பணி சீராக சென்றதால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை பிறந்தது.

ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.

இதனிடையே தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், ஆக்ஜிசன் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன.

இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சரை நாள்தோறும் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரித்துப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆகர் இயந்திரம் பழுதானதால், செங்குத்தாக துளையிட்டு (vertical drilling) 41 உழியர்களை மீட்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஒருபுறம் செங்குத்தாக துளையிடும் பணியும் நடைபெற்று வந்தது.

மறுபுறம் ஆகர் இயந்திர பிளேடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வந்தது. அதற்கு நேற்று முதல் நல்ல பலன் கிடைக்க தொடங்கியது. ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த துளையில் பைப் சொருகும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், உள்ளே சிக்கி இருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக இன்று மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்த ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீட்கப்படும் தொழிலாளர்கள் சில்க்யாராவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

அங்கு 41 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய தனி வார்டு தொழிலாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் டூ கடற்கரை இரயில் இரத்து – என்ன காரணம்?

Next Post

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies