உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 08:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 5.30 மணி அளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆகர் இயந்திரத்தின் மூலம் சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெற்றது. துளையிடும் பணி சீராக சென்றதால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை பிறந்தது.

ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.

இதனிடையே தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், ஆக்ஜிசன் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன.

இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சரை நாள்தோறும் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரித்துப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆகர் இயந்திரம் பழுதானதால், செங்குத்தாக துளையிட்டு (vertical drilling) 41 உழியர்களை மீட்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஒருபுறம் செங்குத்தாக துளையிடும் பணியும் நடைபெற்று வந்தது.

மறுபுறம் ஆகர் இயந்திர பிளேடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வந்தது. அதற்கு நேற்று முதல் நல்ல பலன் கிடைக்க தொடங்கியது. ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த துளையில் பைப் சொருகும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், உள்ளே சிக்கி இருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக இன்று மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்த ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீட்கப்படும் தொழிலாளர்கள் சில்க்யாராவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

அங்கு 41 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய தனி வார்டு தொழிலாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

Tags: rescue 40 workers trapped in the tunnel
Share
Tweet
SendShare
Previous Post

தாம்பரம் டூ கடற்கரை இரயில் இரத்து – என்ன காரணம்?

Next Post

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies