அதிர்ச்சி - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!
Oct 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தவறு செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதே வேளையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், போதிய காவல் நிலையங்களும், காவலர்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையை நீதிமன்றத்தில் பெற்றுத்தர முடியும். இறுதி அறிக்கை இல்லாமல் விசாரணைகள் தொடங்க முடியாது.

வழக்குகளின் நிலையை ஆய்வு செய்தல், ஆய்வக மற்றும் தடயவியல் அறிக்கைகள் பெறுவதில் தாமதம், பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் மற்றும் விசாரணை அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்துப் பயிற்சி இல்லாதது ஆகியவை இது போன்ற வழக்குகள் தேங்க காரணம் எனக் கூறப்படுகிறது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CrPC) பிரிவு 167 -ன் படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறினால், அவர் இயல்பாகவே, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியும். ஒரு சில குற்றங்களுக்கு மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்தை 90 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.

இதனால், சென்னை காவல்துறையின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில், வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், நிலுவையில் உள்ளவற்றைக் குறைக்கவும், அதிகாரிகளுக்குச் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் தாள் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்பத் திரிகையைத் தாக்கல் செய்யும் தேதி நெருங்கும் போது, வண்ணக் குறியீடு தானாகவே பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த எச்சரிக்கிறது.

காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிக்க முக்கிய ஆவணமான கேஸ் டைரி பயன்படுகிறது.

Tags: chennai high courtCase
ShareTweetSendShare
Previous Post

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Next Post

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies