அதிர்ச்சி - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!
Sep 12, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தவறு செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதே வேளையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், போதிய காவல் நிலையங்களும், காவலர்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையை நீதிமன்றத்தில் பெற்றுத்தர முடியும். இறுதி அறிக்கை இல்லாமல் விசாரணைகள் தொடங்க முடியாது.

வழக்குகளின் நிலையை ஆய்வு செய்தல், ஆய்வக மற்றும் தடயவியல் அறிக்கைகள் பெறுவதில் தாமதம், பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் மற்றும் விசாரணை அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்துப் பயிற்சி இல்லாதது ஆகியவை இது போன்ற வழக்குகள் தேங்க காரணம் எனக் கூறப்படுகிறது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CrPC) பிரிவு 167 -ன் படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறினால், அவர் இயல்பாகவே, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியும். ஒரு சில குற்றங்களுக்கு மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்தை 90 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.

இதனால், சென்னை காவல்துறையின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில், வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், நிலுவையில் உள்ளவற்றைக் குறைக்கவும், அதிகாரிகளுக்குச் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் தாள் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்பத் திரிகையைத் தாக்கல் செய்யும் தேதி நெருங்கும் போது, வண்ணக் குறியீடு தானாகவே பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த எச்சரிக்கிறது.

காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிக்க முக்கிய ஆவணமான கேஸ் டைரி பயன்படுகிறது.

Tags: chennai high courtCase
Share
Tweet
SendShare
Previous Post

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Next Post

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies