பாரதப் பிரதமர் மோடி தலைமையில், நாடு முழுவதும் விரைவான இரயில் சேவை மற்றும் நவீன வசதி ஆகியவற்றை பொது மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே நவம்பர் 29-ம் தேதி முதல், டிசம்பவர் 6 -ம் தேதி, 13 -ம் தேதி, 20 -ம் தேதி, 27 -ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல், சென்னை – கோவை இடையிலும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் நவம்பர் 28 -ம் தேதி முதல் ஜனவரி 30 -ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில், காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாகக் கோவையில் பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்குச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.