சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா உறுதி!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 29, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். இதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநில பா.ஜ.க. சார்பில் தர்மதாலாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமித்ஷ் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததோடு, மேற்கு வங்க மாநில அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி தர்மதாலாவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 மக்களவைத் தொகுதிகளையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 77 எம்.எல்.ஏ.க்களையும் கொடுத்து, அடுத்த ஆட்சி பா.ஜ.க.தான் என்று முடிவு செய்த மேற்கு வங்க மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி, சட்டமன்றத்தில் இருந்து 2-வது முறையாக மம்தா பானர்ஜியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவரை உங்களால் சஸ்பெண்ட் செய்யலாம். ஆனால், மேற்கு வங்க மக்களை உங்களால் அமைதிப்படுத்த முடியாது. உங்களது நேரம் முடிந்து விட்டது என்று சொல்கிறார்கள்.

நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இம்மாநிலத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சமாதான அரசியல் நிறுத்தப்பட்டதா? அரசியல் வன்முறைகள் நின்றுவிட்டதா? ஊழல் நின்றுவிட்டதா?

நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக அளவிலான ஊடுருவல் நடக்கிறது. இவ்வளவு ஊடுருவல் நடக்கும் மாநிலத்தில், வளர்ச்சி நடக்குமா? இதனால்தான் மம்தா பானர்ஜி சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்க்கிறார். ஆனால், சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். அதை யாராலும் தடுக்க முடியாது. அச்சட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு லட்சங்கள், கோடிகளை அனுப்புகிறார். ஆனால், அப்பணம் ஏழை மக்களைச் சென்றடைய விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தடுத்து விடுகிறது. இம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், அதற்கான அடித்தளம் 2024 மக்களைத் தேர்தலில் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

Tags: west bengalAmit shaRally
ShareTweetSendShare
Previous Post

பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்!

Next Post

TNPSC-யில் 15,000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies