சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா உறுதி!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா உறுதி!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். இதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநில பா.ஜ.க. சார்பில் தர்மதாலாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமித்ஷ் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததோடு, மேற்கு வங்க மாநில அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி தர்மதாலாவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 மக்களவைத் தொகுதிகளையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 77 எம்.எல்.ஏ.க்களையும் கொடுத்து, அடுத்த ஆட்சி பா.ஜ.க.தான் என்று முடிவு செய்த மேற்கு வங்க மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி, சட்டமன்றத்தில் இருந்து 2-வது முறையாக மம்தா பானர்ஜியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவரை உங்களால் சஸ்பெண்ட் செய்யலாம். ஆனால், மேற்கு வங்க மக்களை உங்களால் அமைதிப்படுத்த முடியாது. உங்களது நேரம் முடிந்து விட்டது என்று சொல்கிறார்கள்.

நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இம்மாநிலத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சமாதான அரசியல் நிறுத்தப்பட்டதா? அரசியல் வன்முறைகள் நின்றுவிட்டதா? ஊழல் நின்றுவிட்டதா?

நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக அளவிலான ஊடுருவல் நடக்கிறது. இவ்வளவு ஊடுருவல் நடக்கும் மாநிலத்தில், வளர்ச்சி நடக்குமா? இதனால்தான் மம்தா பானர்ஜி சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்க்கிறார். ஆனால், சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். அதை யாராலும் தடுக்க முடியாது. அச்சட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு லட்சங்கள், கோடிகளை அனுப்புகிறார். ஆனால், அப்பணம் ஏழை மக்களைச் சென்றடைய விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தடுத்து விடுகிறது. இம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், அதற்கான அடித்தளம் 2024 மக்களைத் தேர்தலில் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

Tags: Rallywest bengalAmit sha
ShareTweetSendShare
Previous Post

பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்!

Next Post

TNPSC-யில் 15,000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies