தெலங்கானாவில் வாக்குப்பதிவு விறுவிறு!
Aug 18, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் வாக்குப்பதிவு விறுவிறு!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

தெலங்கானாவைப் பொறுத்தவரை, 2014-ம் ஆண்டு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளாக பி.ஆர்.எஸ். கட்சிதான் ஆட்சியில் இருந்து வருகிறது.

(இக்கட்சி ஏற்கெனவே தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது). மாநில முதல்வராக கே.சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 19 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றிபெற்றன. அதேசமயம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 இடங்களில் வெற்றிபெற்று ஆச்சரியப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இம்மாநிலத்தைப் பொறுத்தவரை பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க., ஏ.ஐ.எம்.ஐ.எம்., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. எனினும், பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள், 1,63,02,261 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

119 தொகுதிகளில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் நடமாட்டமுள்ள தொகுதிகளில் மாலை 4 மணிவரையும், மீதியுள்ள 106 தொகுதிகளில் மாலை 5 மணிவரையும் வாக்கப்பதிவு நடைபெறும்.

பி.ஆர்.எஸ். 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒ்துக்கிய 1 தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 118 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.

முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, எம்.பி. சஞ்சய் குமார் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் பணியில் 2.5 அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் 77,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளை காலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகும்.

Tags: TelanganaPollsElection
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி, மகனுக்கும் மருமகனுக்குமான, ஒரு குடும்ப ஆட்சி! – அண்ணாமலை சாடல்

Next Post

4 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

Related News

திருத்தணி முருகன் கோயில் 2-ம் நாள் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies