முதல்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதி!
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிசுற்றில் உகாண்டா அணி வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது. இதற்கு குறிப்பிட்ட சில அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் புதிய அணிகளுக்கான தகுதி சுற்று நடைபெற்று வந்தது.

இந்த தொடருக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இரண்டு அணிகளை பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஏழு ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஆப்பிரிக்க பிராந்திய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடர் நடைபெற்றது.

அதில் உகாண்டா அணி தான் ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று அந்த தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்று டி20 உலகக்கோப்பைக்கு 20 வது அணியாக தகுதி பெற்றுள்ளது.

மற்றொரு அணியாக நமிபியா தகுதி பெற்றுள்ளது. நமிபியா அணி ஏற்கனவே ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை போன்றவற்றில் பங்கேற்றுள்ளது.

ஆனால், உகாண்டா முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த அணியில் ரோனக் பட்டேல், அல்பேஷ் ரம்ஜானி, தினேஷ் நக்ரானி போன்ற சில இந்திய வம்சாவளி வீரர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் தொடரில் நமிபியா, உகாண்டா, ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, நைஜீரியா, டான்ஜானியா ஆகிய ஏழு நாடுகள் பங்கேற்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற ஆறு அணிகளுடன் விளையாட வேண்டும். முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.

இதில் நமிபியா இதுவரை தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்துள்ளது, உகாண்டா தான் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று தனது இடத்தை உறுதி செய்துள்ளது. நமிபியா அணியிடம் மட்டுமே உகாண்டா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

2024 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

அந்த உலகக்கோப்பையில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20 அணிகளின் பட்டியல் : வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.

Tags: t20Team Uganda
ShareTweetSendShare
Previous Post

தனியார்மயமாகும் ஹோட்டல் தமிழ்நாடு? – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் கவனிக்கப்படாமல் இருந்த சமத்துவக் கொள்கை: பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies