காங்கிரஸ் ஆட்சியில் கவனிக்கப்படாமல் இருந்த சமத்துவக் கொள்கை: பிரதமர் மோடி!
Aug 12, 2026, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியில் கவனிக்கப்படாமல் இருந்த சமத்துவக் கொள்கை: பிரதமர் மோடி!

10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! - பிரதமர் நரேந்திர மோடி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 30, 2023, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக சமத்துக் கொள்கை கவனிக்கப்படாமல் இருந்தது. இதனால், 2014-க்கு முன்பு குறிப்பிட்ட பிரிவினர் சில அடிப்படை வசதிகளை இழந்தனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ரோஜ்கர் மேளா என்கிற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். இதன்படி, சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், இன்று நடந்த ரோஜ்கர் மேளாவில் 51,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இன்று 50,000 பேருக்கு அரசு வேலை வாய்ப்புக் கடிதங்கள் கிடைத்துள்ளன. இந்த சலுகைக் கடிதங்கள் உங்கள் முயற்சி மற்றும் திறமையின் விளைவாகும்.

இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசுக்காக நீங்கள் அனைவரும் பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், நாட்டில் மக்கள் எளிதாக வாழ்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நவம்பர் 26-ம் தேதியன்று அரசியலமைப்பு தினத்தை கொண்டாடினோம். 1949-ம் ஆண்டு இந்த நாளில்தான், அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கும் இந்திய அரசியலமைப்பை நாடு ஏற்றுக்கொண்டது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கர், அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சம வாய்ப்பு வழங்கும் தேசத்தைக் கனவு கண்டார்.

துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக சமத்துவக் கொள்கை கவனிக்கப்படாமல் இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சில அடிப்படை வசதிகளை இழந்தனர்.

2014-ல் நாடு எங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும், அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பையும் வழங்கியபோது, நாங்கள் முதலில் ‘பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை’ என்ற மந்திரத்துடன் முன்னேறத் தொடங்கினோம்.

திட்டங்களின் பலனை ஒருபோதும் பெறாத மக்களுக்கு அரசாங்கமே சென்றடைந்தது. பல தசாப்தங்களாக அரசிடம் இருந்து எந்த வசதியும் பெறாதவர்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து வருகிறோம்.

அரசாங்கத்தின் சிந்தனை மற்றும் பணி நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் நாட்டில் நம்பமுடியாத மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

அதிகாரத்துவமும் ஒன்றுதான், மக்களும் ஒன்றுதான். இன்னும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டபோது, ​​எல்லாமே மாறத் தொடங்கி இந்தியா சுறுசுறுப்பாக முன்னேறியது” என்றார்.

Tags: PM ModiRozgar mela
Share
Tweet
SendShare
Previous Post

முதல்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதி!

Next Post

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies