நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது! -மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது! -மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே ஆண்டில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை, விரைவில் 10 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நம் பாரத தேசத்தின் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக மற்றும் வளர்ச்சிக்காகவும் சாகர் மேளம் திட்டத்தை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

இந்நிலையில் நாடு முழுவதும் 51,000 ஆயிரம் பணி நியமன ஆணைகளை காணொலி மூலமாக இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்துஸ்தான் கல்லூரியில், புதிதாக பதவி ஏற்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன அணைகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் 42 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,

‘இன்று பணி ஆணை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டு செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் கொடி ஏற்றி, அடுத்த ஓராண்டிற்குள் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

அதை நிறைவேற்றும் வகையில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை, விரைவில் 10 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல, முதலாளிகளாகவும் மாறலாம்.

இந்த ஸ்டார்ட்அப்களின் தலைமை நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களின் திறன்களை மேம்படுத்த ஸ்கில் இந்தியா திட்டம் செயல்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் செயல்படுத்தப்படுகின்றன.

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்களித்தன. குறிப்பாக, தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சந்திரயான் வெற்றிக்கு பங்களித்தன.

முன்பு பாதுகாப்பு பொருட்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடமாக அறிவிக்கப்பட்டு, ராணுவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

அதுபோல, தொழில் வளர்ச்சியிலும், தேசத்தின் வளர்ச்சியிலும் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், கதி சக்தி திட்டத்தின் கீழ் உள்நாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வெறும் 6 மணி நேரத்தில் பயணிக்க முடியும். வந்தே பாரத் ரயில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்களிடையே உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்,  உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பெரும் விழிப்புணர்வை சமீபத்தில் பிரதமர் ஏற்படுத்தினார்.

இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளுர் பொருட்களை பயன்படுத்தினால் தான் சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்.

இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வது இன்று பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர்கள் கையில் உள்ளது’ என்றார்.

 

Tags: L Murugan
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சிபிஐ சோதனை!

Next Post

 பழம்பெரும் மலையாள நடிகை ஆர்.சுப்பலட்சுமி காலமானார்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies