நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது! -மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
Aug 21, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது! -மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

Web Desk by Web Desk
Dec 1, 2023, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே ஆண்டில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை, விரைவில் 10 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நம் பாரத தேசத்தின் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக மற்றும் வளர்ச்சிக்காகவும் சாகர் மேளம் திட்டத்தை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

இந்நிலையில் நாடு முழுவதும் 51,000 ஆயிரம் பணி நியமன ஆணைகளை காணொலி மூலமாக இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்துஸ்தான் கல்லூரியில், புதிதாக பதவி ஏற்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன அணைகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் 42 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,

‘இன்று பணி ஆணை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டு செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் கொடி ஏற்றி, அடுத்த ஓராண்டிற்குள் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

அதை நிறைவேற்றும் வகையில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை, விரைவில் 10 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல, முதலாளிகளாகவும் மாறலாம்.

இந்த ஸ்டார்ட்அப்களின் தலைமை நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களின் திறன்களை மேம்படுத்த ஸ்கில் இந்தியா திட்டம் செயல்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் செயல்படுத்தப்படுகின்றன.

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்களித்தன. குறிப்பாக, தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சந்திரயான் வெற்றிக்கு பங்களித்தன.

முன்பு பாதுகாப்பு பொருட்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடமாக அறிவிக்கப்பட்டு, ராணுவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

அதுபோல, தொழில் வளர்ச்சியிலும், தேசத்தின் வளர்ச்சியிலும் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், கதி சக்தி திட்டத்தின் கீழ் உள்நாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வெறும் 6 மணி நேரத்தில் பயணிக்க முடியும். வந்தே பாரத் ரயில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்களிடையே உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்,  உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பெரும் விழிப்புணர்வை சமீபத்தில் பிரதமர் ஏற்படுத்தினார்.

இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளுர் பொருட்களை பயன்படுத்தினால் தான் சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்.

இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வது இன்று பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர்கள் கையில் உள்ளது’ என்றார்.

 

Tags: L Murugan
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சிபிஐ சோதனை!

Next Post

 பழம்பெரும் மலையாள நடிகை ஆர்.சுப்பலட்சுமி காலமானார்!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies