தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Jan 14, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை தீவுத்திடல் பகுதியில், வருகிற 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கார் பந்தயத்தினால் பொது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால், இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ஸ்ரீ ஹரிஷ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போட்டியை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு, பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகின்றன. உலகில் பல இடங்களில் நடைபெறும், தெரு கார் பந்தயங்களால், பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

கார் பந்தயத்தால், அப்பகுதியில் இராணுவம், கடற்படை மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்றும், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தயத்தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரின் மத்தியில் பந்தயம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆசைக்காக, முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்காக தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், பந்தயத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதுமாக தனியார் நிறுவனத்திற்கே செல்லும்.

இதற்காக தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்துள்ள நிலையில், பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ செலவுகளை யார் ஏற்பது என்று கேட்டார்.

அப்போது நீதிபதிகள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்திற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது.

பந்தயம் நடத்துவதால், அரசுக்கு கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா?, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

இதை அடுத்து, தமிழக அரசிற்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: high courtchennai high courtFor Formula 4 car racing
ShareTweetSendShare
Previous Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Next Post

மீண்டும் கோவையில் குண்டு வெடிக்க சதியா? இதை திமுக போலீஸ் விசாரிக்கவேண்டாம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies