மீண்டும் கோவையில் குண்டு வெடிக்க சதியா? இதை திமுக போலீஸ் விசாரிக்கவேண்டாம்!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் கோவையில் குண்டு வெடிக்க சதியா? இதை திமுக போலீஸ் விசாரிக்கவேண்டாம்!

பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

2,953 கிலோ வெடிமருந்து வைக்கோல் போர்வையில் மறைத்து வைக்கப்பட்டு கோவைக்கு எடுத்து செல்லப்பட்டதை, சேலத்தில் போலீசார் பிடித்தனர்! விசாரிக்கின்றனர்! வண்டியில் என்ன இருக்கிறது என சோதித்து கண்டுபிடித்தது போலீஸ் கான்ஸ்டெபிளின் சாதாரண செயல்! இப்போது சிக்கிக்கொண்டது என தெரிந்தவுடன் அனுப்பியவர்கள் யாரிடம் தொடர்புகொண்டு என்ன பேசுவார்கள்? இவர்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

இதே கோயம்புத்தூரில் 2022 ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக கோயிலில் வெடிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வெடிபொருள் நிரப்பிய கார் ஒன்று கோட்டீஸ்வரன் கோயிலின் முன்பே யாராலும் இயக்கப்படாமல் வெடித்துவிட்டது!

தமிழக முதலமைச்சரும் போலீஸ் உயர் அதிகாரியான டி.ஜி.பி அவர்களும் இது வெறும் கேஸ் சிலிண்டர் வெடிப்புதான் என சாதித்தார்கள்! ஆனால் வழக்கினை N.I.A எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டு விசாரித்தது!

30 க்கும் மேலான இஸ்லாமிய மதவாத பயங்கரவாதிகளோடு தொடர்பு இருப்பதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்! இன்றுவரை முதலமைச்சரும் திமுகவினரும், D.G.P அவர்களும் வருத்தம் தெரிவிக்கவில்லை நாங்கள் தவறாக அறிவித்துவிட்டோம், அது ஹிந்துக்களை குறிவைத்து செயல்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத திட்டம்தான் என சொல்லவில்லை!

1998 ல் கோவையில் பாஜகவின் தேசிய தலைவர் அத்வானி  உரையாற்றவிருந்த இடத்தை சுற்றி, கோவைக்கு வந்துவிட்ட தலைவர் அவர்கள் மேடைக்கு வரவிருந்த வேளையில், 12 கிலோமீட்டர் சுற்றளவில் 11 இடங்களில் 13 குண்டுகள் வெடிக்கப்பெய்யப்பட்டன!

46 பேர் சாகடிக்கப்பட்டனர்! 2000 பேர் காயமடைந்தனர்! அந்த குண்டு வெடிப்பின்போதும் திமுகதான் ஆட்சியில் இருந்தது! அல் உம்மா என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புதான் செய்ததாக கண்டறியப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டன!

அந்த தண்டணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று இன்றுவரை திமுக குரல் கொடுத்து வருகிறது! குண்டுவெடிப்பில் இறந்துப்போனவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் திமுக வருத்தம் தெரிவித்ததாக தெரியவில்லை!

சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பின்போதும் திமுக ஆட்சிதான்! திமுக இன்றுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை!

குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதுதான் அரசியலில் லட்சியம் என ஆளுங்கட்சி நடந்துகொள்கிறது! தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக விளங்குவோருக்கும் அத்தகைய நோக்கம் இருப்பதாகவே மேடைகளில் பேசிக்கொள்கிறார்கள்! வெளிப்படையாகவே சொல்கிறார்கள்!

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தமட்டில், பயங்கரவாதத்திற்கும் குறிப்பிட்ட சமூகத்திற்கும் சம்மந்தம் இருப்பதாக கருதவில்லை! மத வழிபாடும் மத அடிப்படையிலான ஒற்றுமையும் மத அடிப்படையிலான பயங்கரவாதமும் ஒன்றல்ல! என்பதுதான் பாஜக கொள்கை! பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை!

ஆனால் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள், மத வழிப்பாடு, மத ஒற்றுமை, மத அடிப்படையிலான பயங்கரவாத செயல்பாடு இவை அனைத்தையுமே இணைத்து பார்ப்பதாகவே தோன்றுகிறது! எனவேதான் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என துடிக்கிறார்கள்!

குறிப்பிட்ட சமூகம் என வந்துவிட்டால் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் பயங்கரவாத செயல்பாடுகளையும் ஆதரிக்கிறார்களா என்னும் கேள்வி எழுகிறது! இத்தகைய கேள்வி நடு நிலையாளர்கள் மத்தியில் எழும் வகையில் சில கட்சிகள் நடந்துக்கொள்வது நாட்டுக்கு நல்லதல்ல!

குறிப்பிட்ட சமூகம் மட்டுமல்ல, முன்னால் பிரதமர் ராஜூவ் காந்தி அவர்களை பயங்கரமாக கொலை செய்தவர்களையும் விடுதலை செய்யுங்கள் என்றுதான் சில கட்சிகள் தமிழகத்தில் கோரிவருகின்றனர்!

பயங்கரவாதிகளை விடுதலை செய்யுங்கள், அவர்கள் சிறையில் இருந்தது போதும், இனி விட்டுவிடுங்கள் என்றெல்லாம் பரிந்துபேசும் திமுகதான் இப்போதும் ஆட்சியில் இருப்பதால், இப்போதும் கோவையை நோக்கி சென்றுள்ள இந்த பயங்கரவாதத்தை தமிழக போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிப்படாது!

உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்! எனவே இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமையான N.I.A யிடம் ஒப்படைக்கவேண்டும் என திமுக நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்! திமுக எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யட்டும், ஆனால், மதம் சார்ந்த அரசியல் செய்யவேண்டாம் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpkovai bomb blastdmk failskumari krishnan bjp
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Next Post

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை  உதவியாக இருக்கும் – ரவி பிஷ்னோய் !

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies