திருவண்ணாமலை: 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!
Nov 17, 2025, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை: 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!

Web Desk by Web Desk
Dec 1, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில், மகா தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இதை அடுத்து, மகா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி முதல், மகா தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. விழாவில் தினமும் காலை மற்றும் இரவில், சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.

கடந்த 26-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தெப்பம் உற்சவம் நடந்து வந்த நிலையில், நிறைவு விழாவான நேற்று, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின்னர் மகா தீப கொப்பரையிலிருந்து தீப மை பிரசாதம் சேகரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Tags: tiruvannamalai templekaarthigai deepam
ShareTweetSendShare
Previous Post

அஜித்தின் 64-வது படத்தின் இயக்குநர் யார்?

Next Post

மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

Related News

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு – நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்த பாகிஸ்தான் வழக்கறிஞர்கள்!

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும் – டாஸ்மாக் ஊழியர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

திருவள்ளூர் : பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் கூடுதல் நீர்திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்!

யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்

Load More

அண்மைச் செய்திகள்

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

மயிலாடுதுறை : மயூரநாதர் கோவிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம்!

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

கிராண்டு விட்டாரா காரை ரீகால் செய்திருக்கும் மாருதி!

திருவண்ணாமலை : டீசல் டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி!

திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

கரூர் : கிராமப் புற பகுதிகளில் உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்!

செவ்வாய் கிரகத்தில் இயங்கும் வகையில் ஜிபிஎஸ் இல்லாத ட்ரோன் சோதனை!

புதிய டாடா சியரா மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமானது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies