துபாயில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பினார்.
உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளைக் காண்பதற்காக, ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா உட்பட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க, துபாய் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், அங்கு வந்த உலக தலைவர்களைச் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், துபாயில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று நள்ளிரவில் டெல்லி திரும்பினார்.