தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டின் தேவைகளை மனதில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், அந்த கண்டுபிடிப்புகளை உரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 111-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிக அளவில் ஊக்குவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகளுக்காக இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், 60-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மாணவர்களிடையே புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்கலைக்கழகத்தில் ஒரு தொழில் பாதுகாப்பு மையம் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளூர் தேவைகளை மனதில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அந்த கண்டுபிடிப்புகளை உரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது முழு உலகமும் ஒரு கிராமத்தைப் போல உள்ளது என்றும் அவர் கூறினார். எந்த நிறுவனமும் நவீன உலகத் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதில்லை என்று அவர் தெரிவித்தார். நாக்பூர் பல்கலைக்கழகம் பல்துறை ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே, உலகின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தொழிநுட்பத்தின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்த குடியரசுத்தலைவர், எந்தவொரு வளத்தையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்தையும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், அது நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறினார்.

அவற்றைத் தவறாகப் பயன்படுத்தினால், அது ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நம் வாழ்க்கையை எளிதாக்கும் வேளையில் அதில் உள்ள டீப்ஃபேக் தொழில்நுட்பம் சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

பட்டம் பெறுவது கல்வியின் முடிவல்ல என்றும் மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொழில்நுட்பத் துறையில் விரைவான மாற்றங்கள் நிகழும்போது, தொடர்ந்து அதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நம்மைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் நாடு மற்றும் சமூகத்தின் சொத்து என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய அவர், பின்னடைவுகளைக் கண்டு பின்வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த சூழ்நிலைகளை அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று குடியரசுத்தலைவர்  திரெளபதி முர்மு கூறினார்.

Tags: NagpurPresident Mrs. Draupadi MurmuRashtrasand Dukadoji MaharajDraupadi Murmu speech
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Next Post

‘ANIMAL’ – திரைப்படம் முதல் நாளில் 100 கோடி வசூல் சாதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies