லஞ்ச அமலாக்கத்துறை அதிகாரி : காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!
Aug 19, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்ச அமலாக்கத்துறை அதிகாரி : காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அங்கிட் திவாரி. கடந்த 2018-ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

விசாரணை அதிகாரி அந்தஸ்தில் இருந்த இவர், காலங்கரை எம்.என்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். இவர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, மேல்விசாரணை நடத்தாமல் இருக்க கடந்த நவம்பர் 1-ம் தேதி 20 லட்சம்  லஞ்சம் பெற்றார்.

தொடர்ந்து, 2-வது தவணையாக டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்து மேலும் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக அங்கித் திவாரியை கைது செய்தனர். இதையடுத்து, அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் காவலில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அங்கிட் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, நேற்று காலை 7 மணி வரை என 13 மணி நேரம் நடந்தது.

பெண் ஊழியர்கள் மட்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் மூடப்பட்டது. இந்த சூழலில், அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், “அங்கிட் திவாரியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அங்கிட் திவாரி லஞ்சம் வாங்குவதற்கு சில உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

இந்த அதிகாரிகளுக்கு பெரிய தொகையைக் குறிவைத்து லஞ்ச பேரம் பேசுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கும் பணத்தை 7 அதிகாரிகள் பங்கு போட்டுக்கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, இவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் இச்சோதனை உதவி இருக்கிறது.

அந்த அதிகாரிகளுக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்த மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும். இதனிடையே, அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இதற்காக நாளை மனுத் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

Tags: BribeEnforcement departmentOfficer
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டில் தொடரும் கனமழை: பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Next Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி அஞ்சலி

Related News

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies