பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!
Jul 25, 2025, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, பிரதமர் மோடி தலைமைக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் மிசோராம் தவி மற்ற மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்திருக்கிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 164 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது.

199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 111 இடங்களிலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 54 இடங்களிலும் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், மேற்கண்ட 3 மாநில வெற்றி தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நேர்மறை அர்ப்பணிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. இதை கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்திருக்கிறது. விரைவில் தெலங்கானாவிலும் பா.ஜ.க. வளர்ச்சி அடையும். நாங்கள் ராஜஸ்தானில் குறைந்தது 124 இடங்களை கடப்போம். இதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அதேபோல, இது பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் வெற்றி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் வெற்றி. பிரதமர் மோடி சொல்வதைச் செய்கிறார். ஆகவே, ஜாதி, மதத்தை தாண்டி மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjp won3 state AssemblyCentral ministersPrahalath Joshijitendra singh
ShareTweetSendShare
Previous Post

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு!

Next Post

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies