பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, பிரதமர் மோடி தலைமைக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் மிசோராம் தவி மற்ற மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்திருக்கிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 164 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது.

199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 111 இடங்களிலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 54 இடங்களிலும் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், மேற்கண்ட 3 மாநில வெற்றி தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நேர்மறை அர்ப்பணிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. இதை கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்திருக்கிறது. விரைவில் தெலங்கானாவிலும் பா.ஜ.க. வளர்ச்சி அடையும். நாங்கள் ராஜஸ்தானில் குறைந்தது 124 இடங்களை கடப்போம். இதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அதேபோல, இது பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் வெற்றி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் வெற்றி. பிரதமர் மோடி சொல்வதைச் செய்கிறார். ஆகவே, ஜாதி, மதத்தை தாண்டி மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: jitendra singhbjp won3 state AssemblyCentral ministersPrahalath Joshi
ShareTweetSendShare
Previous Post

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு!

Next Post

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies