பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!
Jan 14, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, பிரதமர் மோடி தலைமைக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் மிசோராம் தவி மற்ற மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்திருக்கிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 164 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது.

199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 111 இடங்களிலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 54 இடங்களிலும் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், மேற்கண்ட 3 மாநில வெற்றி தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நேர்மறை அர்ப்பணிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. இதை கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்திருக்கிறது. விரைவில் தெலங்கானாவிலும் பா.ஜ.க. வளர்ச்சி அடையும். நாங்கள் ராஜஸ்தானில் குறைந்தது 124 இடங்களை கடப்போம். இதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அதேபோல, இது பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் வெற்றி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் வெற்றி. பிரதமர் மோடி சொல்வதைச் செய்கிறார். ஆகவே, ஜாதி, மதத்தை தாண்டி மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: jitendra singhbjp won3 state AssemblyCentral ministersPrahalath Joshi
ShareTweetSendShare
Previous Post

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு!

Next Post

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies