பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!
Sep 17, 2026, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, பிரதமர் மோடி தலைமைக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் மிசோராம் தவி மற்ற மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்திருக்கிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 164 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது.

199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 111 இடங்களிலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 54 இடங்களிலும் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், மேற்கண்ட 3 மாநில வெற்றி தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நேர்மறை அர்ப்பணிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. இதை கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்திருக்கிறது. விரைவில் தெலங்கானாவிலும் பா.ஜ.க. வளர்ச்சி அடையும். நாங்கள் ராஜஸ்தானில் குறைந்தது 124 இடங்களை கடப்போம். இதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அதேபோல, இது பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் வெற்றி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் வெற்றி. பிரதமர் மோடி சொல்வதைச் செய்கிறார். ஆகவே, ஜாதி, மதத்தை தாண்டி மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: jitendra singhbjp won3 state AssemblyCentral ministersPrahalath Joshi
Share
Tweet
SendShare
Previous Post

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு!

Next Post

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies