வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!
Mar 15, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். இந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 167 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-ல் 2 பங்கு தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. மாநில முதல்வராக மீண்டும் சிவராஜ் சிங் சௌஹான் பதவியேற்கவிருக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. பிரதமர் மோடி மீது இம்மாநில மக்களுக்கு அளவிட இயலாத அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டு விட்டது. இதுதான் தேர்தல் முடிவாக மாறியிருக்கிறது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள் இன்ஜின்) பா.ஜ.க. ஆட்சி நடக்கும் என்று மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது நல்ல பலனை அளித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. ஆட்சிக்கு ஆதரவான அலைதான் நிலவுகிறது. எங்களுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.

இந்த வெற்றியை எங்கள் லாட்லி பெஹ்னாஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: Madya PradeshCM Sivaraj Singh ChouhanBJP Victory
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசம் : தேர்தல் வெற்றியை கொண்டாடிய பாஜக தொண்டர்கள்!

Next Post

2024-ல் மீண்டும் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies