வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். இந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 167 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-ல் 2 பங்கு தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. மாநில முதல்வராக மீண்டும் சிவராஜ் சிங் சௌஹான் பதவியேற்கவிருக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. பிரதமர் மோடி மீது இம்மாநில மக்களுக்கு அளவிட இயலாத அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டு விட்டது. இதுதான் தேர்தல் முடிவாக மாறியிருக்கிறது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள் இன்ஜின்) பா.ஜ.க. ஆட்சி நடக்கும் என்று மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது நல்ல பலனை அளித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. ஆட்சிக்கு ஆதரவான அலைதான் நிலவுகிறது. எங்களுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.

இந்த வெற்றியை எங்கள் லாட்லி பெஹ்னாஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: Madya PradeshCM Sivaraj Singh ChouhanBJP Victory
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசம் : தேர்தல் வெற்றியை கொண்டாடிய பாஜக தொண்டர்கள்!

Next Post

2024-ல் மீண்டும் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies