வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 04:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். இந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 167 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-ல் 2 பங்கு தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. மாநில முதல்வராக மீண்டும் சிவராஜ் சிங் சௌஹான் பதவியேற்கவிருக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. பிரதமர் மோடி மீது இம்மாநில மக்களுக்கு அளவிட இயலாத அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டு விட்டது. இதுதான் தேர்தல் முடிவாக மாறியிருக்கிறது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள் இன்ஜின்) பா.ஜ.க. ஆட்சி நடக்கும் என்று மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது நல்ல பலனை அளித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. ஆட்சிக்கு ஆதரவான அலைதான் நிலவுகிறது. எங்களுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.

இந்த வெற்றியை எங்கள் லாட்லி பெஹ்னாஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: Madya PradeshCM Sivaraj Singh ChouhanBJP Victory
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பிரதேசம் : தேர்தல் வெற்றியை கொண்டாடிய பாஜக தொண்டர்கள்!

Next Post

2024-ல் மீண்டும் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies