நாடாளுமன்றம் மீது தாக்குதல்: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!
May 19, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றம் மீது தாக்குதல்: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

Web Desk by Web Desk
Dec 6, 2023, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி வெளியிட்டிருக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். இவர் சீக் ஃபார் ஜஸ்டிஸ் என்கிற பிரிவினைவாதிகள் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெர்ற இவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், சீக்கியர்கள் யாரும் நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம். அப்படி பயணம் செய்தால், ஆபத்து நேரிடலாம். பஞ்சாப் விடுதலை அடைந்ததும் டெல்லி விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா விமானத்துக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குர்பத்வந்த் சிங் பண்ணுனை அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும், அந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அமெரிக்கத் தரப்பில் முறைப்படி இந்தியாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

“டெல்லி பனேகா காலிஸ்தான்” (டெல்லி காலிஸ்தானாக மாறும்) என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், “2023 டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும். இத்தாக்குதல் மூலம் நாடாளுமன்றத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கப் போகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், 2001-ம் ஆண்டு டெல்லியில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குருவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 22-ம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணுனின் மிரட்டல் வீடியோவைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. குர்பத்வந்த் சிங் பண்ணுனின் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பண்ணுன் புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டும் குற்றவாளியாவார்.

இதனிடையே, பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் கே-2 (காஷ்மீர் – காலிஸ்தான்) மேசை, இந்தியாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கான நிகழ்ச்சி நிரலை, பண்ணுனுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கின்றன.

Tags: ParliamentkhalistanterroristThreaten
ShareTweetSendShare
Previous Post

இலங்கை அதிபருடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியது என்ன!

Next Post

உதயநிதியை வறுத்தெடுத்த பெண்! – லைவ் ரிப்போர்ட்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies