இந்தியா – இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் : இங்கிலாந்து வெற்றி!
Jul 26, 2025, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் : இங்கிலாந்து வெற்றி!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்களுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா டங்க்லி மற்றும் டேனி வியாட் களமிறங்கினர். இதில் முதல் ஓவரில் 4 வது பந்திலேயே சோபியா டங்க்லி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் டேனி வியாட் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

இதில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 77 ரன்களும், டேனி வியாட் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய எமி ஜோன்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரேனுகா சிங் 3 விக்கெட்களும், ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட்களும், சைகா இஷாக்1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.

3 வது ஓவரில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் படுமோசமாக இருந்த சமயத்தில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து நிதானமாக விளையாடி வந்தார்.

நிதானமாக விளையாடி வந்த ஹர்மன் ப்ரீத் 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 21 பந்துகளில் 26 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரது தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 1 பௌண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 21 பந்துகளுக்கு ஆட்டமிழனிக்க அதுவரை பொறுமையாக விளையாடி வந்த ஷாபாலி வர்மா 9 பௌண்டரீஸ் அடித்து 42 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஃப்ரீயா கெம்ப் மற்றும் சாரா க்ளென் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வேற்றுப்பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Tags: womens cricketindia vs england
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!

Next Post

அசாமில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies