அயோத்தி "குழந்தை இராமர் சிலை": 15-ம் தேதி தேர்வு!
Jan 14, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி “குழந்தை இராமர் சிலை”: 15-ம் தேதி தேர்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் குழந்தை இராமர் சிலை வருகிற 15-ம் தேதி தேர்வு செய்யப்படவிருப்பதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இராமஜென்ம பூமியில், இராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பிறகு, கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விழாவில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான மூலவர் குழந்தை இராமர் சிலையை வடிவமைக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில், இச்சிலையை தேர்வு செய்யும் பணி 15-ம் தேதி நடைபெறும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “மூலவர் குழந்தை இராமர் சிலை செய்வதற்காக கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறைக் கற்கள் கொண்டுவரப்பட்டன.

இப்பாறைகளில் இருந்து 3 சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்பணி 90 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. இந்த 3 சிலைகளில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய சிறந்த சிலையை கோவில் அறக்கட்டளை வருகிற 15-ம் தேதி தேர்ந்தெடுக்கும்” என்றார்.

இதனிடையே, அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தொழிலதிபர்கள் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான இராமாயணாவில் இராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா உட்பட 7,000 வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: templeAyothyaStatue
ShareTweetSendShare
Previous Post

‘கர்பா‘ நடனத்திற்கு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ! – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

ஆட்சியாளர்களின் தவறுகளை எந்த சமரசமும் இல்லாமல் மக்களுக்குச் சொன்னவர் சோ! – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies