கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்க வேண்டும்! - ராஜ்நாத் சிங்
Jul 25, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்க வேண்டும்! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Dec 7, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்குமாறும், தேசத்திற்காக போரின்போது அல்லது ராணுவ நடவடிக்கைகளில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதற்கான அரசு முயற்சியின் ஒரு பகுதியாக இருக்குமாறும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிசம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் கொடிநாள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பல நலத்திட்டங்கள் மூலம் முன்னாள் படைவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள்   மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் பராமரிப்பு, உதவி, மறுவாழ்வு மற்றும் சிகிச்சை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப்  பங்களிப்பது  ஒவ்வொரு குடிமகனின் தார்மீக பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு நம் அனைவரிடமிருந்தும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வது நமது கூட்டுக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் போது, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், உலகெங்கிலும் உள்ள அமைதி காக்கும் பணிகளில் மதிப்புமிக்க பங்களிப்பை ராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.

மேலும், ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தியுடன் வீரர்கள் எல்லைகளைப் பாதுகாக்கிறார்கள் என்று பாதுகாப்புத் துறை  அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பலர் உடல் ஊனமுற்றவர்களாக மாறியுள்ள நிலையில், தாய்நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

கொடிநாள் நிதியில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்யுமாறும், இந்த உன்னத நோக்கத்தில் சேர மற்றவர்களை ஊக்குவிக்குமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதனையொட்டி, பாதுகாப்புத் துறை இணையமைச்சர்  திரு அஜய் பட், ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் துணிச்சலான வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க மக்களுக்குக்  கொடிநாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார். கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்குமாறும், நலத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

அண்மையில், முன்னாள் படைவீரர்கள்/ அவர்களைச் சார்ந்தோருக்கான மருத்துவ சிகிச்சை மானியம் ரூ.30,000 லிருந்து ரூ.50,000 ஆகவும், கணவரை இழந்தோருக்கான தொழிற்பயிற்சி மானியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 ஆகவும், தீவிர நோய்கள் சிகிச்சைக்கான  மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.  வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 ஜி உட்பிரிவு (5) (வி)-ன் கீழ் நிதிக்கான பங்களிப்புகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

2022-23 நிதியாண்டில், 99,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ. 250 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, நாடு முழுவதும் உள்ள 36 போர் நினைவு விடுதிகளுக்கும் நிறுவன மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Tags: defence minister rajnath singhFlag Day
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் சிறப்பு இரயில் உட்பட 15 இரயில்கள் ரத்து!

Next Post

தமிழகத்திற்கு ரூ.1,400 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு தாராளம்!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies