உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!
Oct 28, 2025, 10:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ஆனைப்பள்ளம் கிராமத்தில், பத்து ஏக்கர் பரப்பளவிலான மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட மிகப் குளம் அமைந்துள்ளது.

2023- ஆம் ஆண்டுக்கான 15 – வது நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில், குளத்தின் கரைகளை பலப்படுத்தி மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய தூர்வாரும் பணிகள் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நடப்பாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.

குள ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்தாண்டு அதே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு குளத்தினுள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு குவிக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றிடவும், குளத்தினுள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் குளம் சீரமைப்பு பணியின் போது குளத்தினுள் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பொருட்களை அகற்றப்படாமல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை குளத்தினுள் இணைக்காமல் தீவு போல காட்சியளிக்கிறது.

இதனிடையே, குளத்தின் கரைகளையும்,அதனையொட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நீர்-நிலை பொதுவழிக்கான அரசு புறம்போக்கு நிலங்களையும், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஜேசிபி- இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது குறித்த அப்பகுதி மக்கள் பலமுறை உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் லதா, உத்தரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல், ஆகியோரிடம் புகாரளித்தனர்.

ஆனால் இதுவரை குளத்தின் சீரமைப்பு பணிகளையோ நீர்-நிலை ஆக்கிரமிப்பு குறித்த, எவ்விதமான விசாரணையும் செய்யாமல், துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே ஆனைப்பள்ளம் குளத்தினை மாவட்ட பேரூராட்சிகளின் துணை இயக்குநரும், நீர்வளத் துறையினரும், நேரில் ஆய்வு செய்து குளத்தின், நீர் பிடிப்பு பகுதிகளையும், குளத்தின் கரைகளை ஒட்டிய அரசுக்கு சொந்தமான பொது வழிப்பாதைகளில் உள்ள, நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முறையான நான்கு புறங்களிலும் அளவீடு செய்து மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை பழமை மாறாமல்- மீட்டெடுத்து கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Urge to remove encroachments!
ShareTweetSendShare
Previous Post

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Next Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies