உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!
Jul 27, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ஆனைப்பள்ளம் கிராமத்தில், பத்து ஏக்கர் பரப்பளவிலான மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட மிகப் குளம் அமைந்துள்ளது.

2023- ஆம் ஆண்டுக்கான 15 – வது நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில், குளத்தின் கரைகளை பலப்படுத்தி மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய தூர்வாரும் பணிகள் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நடப்பாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.

குள ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்தாண்டு அதே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு குளத்தினுள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு குவிக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றிடவும், குளத்தினுள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் குளம் சீரமைப்பு பணியின் போது குளத்தினுள் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பொருட்களை அகற்றப்படாமல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை குளத்தினுள் இணைக்காமல் தீவு போல காட்சியளிக்கிறது.

இதனிடையே, குளத்தின் கரைகளையும்,அதனையொட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நீர்-நிலை பொதுவழிக்கான அரசு புறம்போக்கு நிலங்களையும், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஜேசிபி- இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது குறித்த அப்பகுதி மக்கள் பலமுறை உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் லதா, உத்தரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல், ஆகியோரிடம் புகாரளித்தனர்.

ஆனால் இதுவரை குளத்தின் சீரமைப்பு பணிகளையோ நீர்-நிலை ஆக்கிரமிப்பு குறித்த, எவ்விதமான விசாரணையும் செய்யாமல், துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே ஆனைப்பள்ளம் குளத்தினை மாவட்ட பேரூராட்சிகளின் துணை இயக்குநரும், நீர்வளத் துறையினரும், நேரில் ஆய்வு செய்து குளத்தின், நீர் பிடிப்பு பகுதிகளையும், குளத்தின் கரைகளை ஒட்டிய அரசுக்கு சொந்தமான பொது வழிப்பாதைகளில் உள்ள, நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முறையான நான்கு புறங்களிலும் அளவீடு செய்து மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை பழமை மாறாமல்- மீட்டெடுத்து கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Urge to remove encroachments!
ShareTweetSendShare
Previous Post

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Next Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies