உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!
Apr 29, 2026, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ஆனைப்பள்ளம் கிராமத்தில், பத்து ஏக்கர் பரப்பளவிலான மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட மிகப் குளம் அமைந்துள்ளது.

2023- ஆம் ஆண்டுக்கான 15 – வது நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில், குளத்தின் கரைகளை பலப்படுத்தி மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய தூர்வாரும் பணிகள் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நடப்பாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.

குள ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்தாண்டு அதே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு குளத்தினுள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு குவிக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றிடவும், குளத்தினுள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் குளம் சீரமைப்பு பணியின் போது குளத்தினுள் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பொருட்களை அகற்றப்படாமல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை குளத்தினுள் இணைக்காமல் தீவு போல காட்சியளிக்கிறது.

இதனிடையே, குளத்தின் கரைகளையும்,அதனையொட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நீர்-நிலை பொதுவழிக்கான அரசு புறம்போக்கு நிலங்களையும், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஜேசிபி- இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது குறித்த அப்பகுதி மக்கள் பலமுறை உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் லதா, உத்தரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல், ஆகியோரிடம் புகாரளித்தனர்.

ஆனால் இதுவரை குளத்தின் சீரமைப்பு பணிகளையோ நீர்-நிலை ஆக்கிரமிப்பு குறித்த, எவ்விதமான விசாரணையும் செய்யாமல், துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே ஆனைப்பள்ளம் குளத்தினை மாவட்ட பேரூராட்சிகளின் துணை இயக்குநரும், நீர்வளத் துறையினரும், நேரில் ஆய்வு செய்து குளத்தின், நீர் பிடிப்பு பகுதிகளையும், குளத்தின் கரைகளை ஒட்டிய அரசுக்கு சொந்தமான பொது வழிப்பாதைகளில் உள்ள, நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முறையான நான்கு புறங்களிலும் அளவீடு செய்து மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை பழமை மாறாமல்- மீட்டெடுத்து கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Urge to remove encroachments!
ShareTweetSendShare
Previous Post

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Next Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies