உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!
Jul 29, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ஆனைப்பள்ளம் கிராமத்தில், பத்து ஏக்கர் பரப்பளவிலான மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட மிகப் குளம் அமைந்துள்ளது.

2023- ஆம் ஆண்டுக்கான 15 – வது நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில், குளத்தின் கரைகளை பலப்படுத்தி மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய தூர்வாரும் பணிகள் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நடப்பாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.

குள ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்தாண்டு அதே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு குளத்தினுள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு குவிக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றிடவும், குளத்தினுள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் குளம் சீரமைப்பு பணியின் போது குளத்தினுள் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பொருட்களை அகற்றப்படாமல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை குளத்தினுள் இணைக்காமல் தீவு போல காட்சியளிக்கிறது.

இதனிடையே, குளத்தின் கரைகளையும்,அதனையொட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நீர்-நிலை பொதுவழிக்கான அரசு புறம்போக்கு நிலங்களையும், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஜேசிபி- இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது குறித்த அப்பகுதி மக்கள் பலமுறை உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் லதா, உத்தரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல், ஆகியோரிடம் புகாரளித்தனர்.

ஆனால் இதுவரை குளத்தின் சீரமைப்பு பணிகளையோ நீர்-நிலை ஆக்கிரமிப்பு குறித்த, எவ்விதமான விசாரணையும் செய்யாமல், துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே ஆனைப்பள்ளம் குளத்தினை மாவட்ட பேரூராட்சிகளின் துணை இயக்குநரும், நீர்வளத் துறையினரும், நேரில் ஆய்வு செய்து குளத்தின், நீர் பிடிப்பு பகுதிகளையும், குளத்தின் கரைகளை ஒட்டிய அரசுக்கு சொந்தமான பொது வழிப்பாதைகளில் உள்ள, நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முறையான நான்கு புறங்களிலும் அளவீடு செய்து மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை பழமை மாறாமல்- மீட்டெடுத்து கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Urge to remove encroachments!
ShareTweetSendShare
Previous Post

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Next Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies