இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி தொடக்கம்! -பிரதமர் மோடி
Oct 4, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி தொடக்கம்! -பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நாட்டில் ஒரு முதன்மையான உலகளாவிய கலாச்சார முன்முயற்சியை உருவாக்குவதற்கும் நிறுவனமயமாக்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது

புது டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தையும், சாமுன்னாட்டி எனப்படும் மாணவர் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

வெனிஸ், சாவ் பாலோ, சிங்கப்பூர், சிட்னி, ஷார்ஜா போன்ற இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளைப் போன்ற ஒரு முதன்மையான உலகளாவிய கலாச்சார முன்முயற்சியை நாட்டில் உருவாக்கி நிறுவனமயமாக்குவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும்.  இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அருங்காட்சியகங்களை புதுப்பித்தல், மறுபெயரிடுதல், புதுப்பித்தல், மறுசீரமைத்தல் ஆகியவற்றுக்கான நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்பட்டது.

மேலும், கொல்கத்தா, தில்லி, மும்பை, அகமதாபாத், வாரணாசி ஆகிய இந்தியாவின் ஐந்து கலாச்சார நகரங்களின்    மேம்பாடு அறிவிக்கப்பட்டது. இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி  தில்லியில் கலாச்சார வெளிக்கு ஒரு அறிமுகமாக செயல்படும்.

2023 டிசம்பர் 9 முதல் 15 வரை புதுதில்லி செங்கோட்டையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ‘ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு  ஏற்ப, செங்கோட்டையில் ‘தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையம்’ அமைக்கப்பட்டு வருகிறது.  இது இந்தியாவின் தனித்துவமான மற்றும் உள்நாட்டு கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும்.

கலைஞர்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டு இடத்தை வழங்கும். ஒரு நிலையான கலாச்சார பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும், இது கைவினைஞர் சமூகங்களை புதிய வடிவமைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் வலுப்படுத்தும்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பேட்டிங் செய்வது சவாலானது – ராகுல் டிராவிட்!

Next Post

உலகக்கோப்பை ஹாக்கி : இந்தியா vs ஸ்பெயின்!

Related News

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies