இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!
Oct 3, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூா்வமாக பதில அளித்தார்.

அப்பதிலில், “நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளுடனான நல்லுறவுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அப்படி வெளியிடும் யூடியூப் செய்திச் சேனல்களை முடக்க 2000-ம் ஆண்டைய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் இதுவரை 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. மின்னணுவியல் ஊடகங்களைப் பொறுத்தவரை, அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டம் 1995-ன் கீழ் வகுக்கப்பட்ட நிகழ்ச்சி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “மேற்கண்ட சட்டத்துக்கு மாற்றான ஒலிபரப்பு சேவை ஒழுங்குமுறை சட்ட வரைவு மசோதா மீது துறைசார் நிபுணர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து மத்திய அரசு தரப்பில் கருத்துகள் கோரப்பட்டுள்ளன” என்றார்.

Tags: Anurag ThakurParliament
ShareTweetSendShare
Previous Post

இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Next Post

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் சேவை ரத்து!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies