மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!
Jul 26, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி.க்குச் சொந்தமான, ஒடிஸா மாநிலத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து 200 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்.

ஒடிஸா மாநிலத்தில் “பவுத் டிஸ்டிலெரி பிரைவேட் லிமிடெட்” என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கோல்கட்டா நகரங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இச்சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்த பீரோக்களில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அங்கு 36-க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களை வைத்து பணத்தை எண்ணி வருகின்றனர். இதில் இதுவரை 200 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இதேபோல, மற்ற இடங்களிலும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்திருக்கலாம் என்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பாண்டே சாஹுவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இச்செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “இதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். நேர்மையின் முகமாக இருக்கும் இதுபோன்ற தலைவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மதுபான விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெரியளவிலான பணப் பரிமாற்றும் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

देशवासी इन नोटों के ढेर को देखें और फिर इनके नेताओं के ईमानदारी के 'भाषणों' को सुनें… 😂😂😂

जनता से जो लूटा है, उसकी पाई-पाई लौटानी पड़ेगी, यह मोदी की गारंटी है।

❌❌❌💵 💵 💵❌❌❌ pic.twitter.com/O2pEA4QTOj

— Narendra Modi (@narendramodi) December 8, 2023

 

Tags: IT raidOdissaLiquor factory
ShareTweetSendShare
Previous Post

மிசோரம் முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies