மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி.க்குச் சொந்தமான, ஒடிஸா மாநிலத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து 200 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்.

ஒடிஸா மாநிலத்தில் “பவுத் டிஸ்டிலெரி பிரைவேட் லிமிடெட்” என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கோல்கட்டா நகரங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இச்சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்த பீரோக்களில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அங்கு 36-க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களை வைத்து பணத்தை எண்ணி வருகின்றனர். இதில் இதுவரை 200 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இதேபோல, மற்ற இடங்களிலும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்திருக்கலாம் என்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பாண்டே சாஹுவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இச்செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “இதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். நேர்மையின் முகமாக இருக்கும் இதுபோன்ற தலைவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மதுபான விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெரியளவிலான பணப் பரிமாற்றும் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

देशवासी इन नोटों के ढेर को देखें और फिर इनके नेताओं के ईमानदारी के 'भाषणों' को सुनें… 😂😂😂

जनता से जो लूटा है, उसकी पाई-पाई लौटानी पड़ेगी, यह मोदी की गारंटी है।

❌❌❌💵 💵 💵❌❌❌ pic.twitter.com/O2pEA4QTOj

— Narendra Modi (@narendramodi) December 8, 2023

 

Tags: IT raidOdissaLiquor factory
ShareTweetSendShare
Previous Post

மிசோரம் முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies