மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி.க்குச் சொந்தமான, ஒடிஸா மாநிலத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து 200 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்.

ஒடிஸா மாநிலத்தில் “பவுத் டிஸ்டிலெரி பிரைவேட் லிமிடெட்” என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கோல்கட்டா நகரங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இச்சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்த பீரோக்களில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அங்கு 36-க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களை வைத்து பணத்தை எண்ணி வருகின்றனர். இதில் இதுவரை 200 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இதேபோல, மற்ற இடங்களிலும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்திருக்கலாம் என்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பாண்டே சாஹுவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இச்செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “இதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். நேர்மையின் முகமாக இருக்கும் இதுபோன்ற தலைவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மதுபான விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெரியளவிலான பணப் பரிமாற்றும் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

देशवासी इन नोटों के ढेर को देखें और फिर इनके नेताओं के ईमानदारी के 'भाषणों' को सुनें… 😂😂😂

जनता से जो लूटा है, उसकी पाई-पाई लौटानी पड़ेगी, यह मोदी की गारंटी है।

❌❌❌💵 💵 💵❌❌❌ pic.twitter.com/O2pEA4QTOj

— Narendra Modi (@narendramodi) December 8, 2023

 

Tags: IT raidOdissaLiquor factory
ShareTweetSendShare
Previous Post

மிசோரம் முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies