விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!
Aug 19, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!

- குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவினர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

‘மக்களுடன் குடியரசுத் தலைவர்’ என்ற இயக்கத்தின் கீழ் அவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். விளையாட்டு வீரர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதும், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

அப்போது உரையாடிய குடியரசுத்தலைவர்,

விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் முன்மாதிரியான செயல்திறன்கள் மூலம்  நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான திறன் ஆகியவை அவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளதாகக் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய     விளையாட்டுப் போட்டிகளில், அவர்களுடைய சிறப்பான பங்களிப்பு மூலம் இந்தியா முறையே 107 மற்றும் 111 பதக்கங்களை வென்றதாக அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் திறமையைப் பற்றி பேசுவது    மட்டுமல்லாமல், அவர்களின் திறன்மிக்க உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

அவர்களின் பயணம் தனிப்பட்ட வெற்றிகள் பற்றியது மட்டுமல்ல; இது அனைத்து இந்தியர்களின் கனவுகளுக்கும் சிறகுகள் முளைப்பது போன்றது என்று தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்கள் நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் நூறு கோடி மக்களின்  உணர்வின் தூதுவர்கள் என்று குறிப்பிட்டவர், இன்னும் சில மாதங்களில், 2024 ம் ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் மீது உலகம் தனது கவனத்தை திருப்பும் என்றும், அனைத்து இந்தியர்களின் பார்வையும் நமது விளையாட்டு வீரர்கள் மீது பதிந்துவிடும் என்றும் கூறினார்.

அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை நம் தேசத்திற்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொண்டு வரும் என்று நாம் நம்புவோம் என்று தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

Next Post

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

Related News

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies