விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!
Jul 29, 2026, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!

- குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவினர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

‘மக்களுடன் குடியரசுத் தலைவர்’ என்ற இயக்கத்தின் கீழ் அவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். விளையாட்டு வீரர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதும், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

அப்போது உரையாடிய குடியரசுத்தலைவர்,

விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் முன்மாதிரியான செயல்திறன்கள் மூலம்  நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான திறன் ஆகியவை அவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளதாகக் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய     விளையாட்டுப் போட்டிகளில், அவர்களுடைய சிறப்பான பங்களிப்பு மூலம் இந்தியா முறையே 107 மற்றும் 111 பதக்கங்களை வென்றதாக அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் திறமையைப் பற்றி பேசுவது    மட்டுமல்லாமல், அவர்களின் திறன்மிக்க உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

அவர்களின் பயணம் தனிப்பட்ட வெற்றிகள் பற்றியது மட்டுமல்ல; இது அனைத்து இந்தியர்களின் கனவுகளுக்கும் சிறகுகள் முளைப்பது போன்றது என்று தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்கள் நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் நூறு கோடி மக்களின்  உணர்வின் தூதுவர்கள் என்று குறிப்பிட்டவர், இன்னும் சில மாதங்களில், 2024 ம் ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் மீது உலகம் தனது கவனத்தை திருப்பும் என்றும், அனைத்து இந்தியர்களின் பார்வையும் நமது விளையாட்டு வீரர்கள் மீது பதிந்துவிடும் என்றும் கூறினார்.

அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை நம் தேசத்திற்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொண்டு வரும் என்று நாம் நம்புவோம் என்று தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

Next Post

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies