வக்ஃபு சட்டம் ரத்து மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்!
Jan 14, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்ஃபு சட்டம் ரத்து மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃப் வாரியச் சட்டம் 1995-ஐ ரத்து செய்யக் கோரும் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்ஃபு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃபுக்கள் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன. வக்ஃபு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாநில அரசுகளின் மூலமாக வக்ஃபு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்ஃபு சொத்துக்கள் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், 1954-ம் ஆண்டு வக்ஃபு சட்டம் நாடளுமன்றதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், இதில் சில குறைப்பாடுகள் இருந்த காரணத்தால் 1959, 1964 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1995-ல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பேரில், பரவலான அம்சங்களை உள்ளடக்கிய புதிய சட்டம் இயற்றப்பட்டது.

அதன்படி, 1995-ல் இயற்றப்பட்ட வக்ஃபு சட்டம் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் வக்ஃபு வாரியங்களை அமைக்க வேண்டும் என்பது வக்ஃபு சட்ட நெறிமுறை வகுத்துள்ளது.

வக்ஃபு சொத்துகளை ஆய்வு செய்வதுடன், வக்ஃபு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்ஃபு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தவும், இப்பணிகளுக்காக ஆய்வு ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இதுவரை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், பீஹார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வக்ஃபு வாரியங்களை அரசுகள் அமைத்துள்ளன.

புதுச்சேரி, சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களிலும், அம்மாநில அரசுகள் வக்ஃபு வாரியங்களை அமைத்துள்ளன. அதேசமயம், அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் டாமன், டையூ யூனியன் பிரதேசத்திலும் வக்ஃபு வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.

மேலும், 1995 வக்ஃபு சட்டத்தில் 83-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வக்ஃபு நடுவர் மன்றங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ஆகவே, வக்ஃபு நெறிமுறைகளை 14 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கை செய்துள்ளன. இதர 6 மாநிலங்கள் வெறும் நெறிமுறைகளை மட்டும் இயற்றி உள்ளன.

மீதியுள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தில் ஷியா பிரிவு வக்ஃபு சொத்துக்கள் இருந்து அவர்களுக்கு தனியே வாரியம் இல்லாத பட்சத்தில் வக்ஃபு வாரியத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது.

இந்த நிலையில்தான், வக்ஃப் சட்டம், 1995-ஐ ரத்து செய்யக் கோரி தனி நபர் மசோதா, மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 53 உறுப்பினர்களும், எதிராக 32 பேரும் வாக்களித்தனர். அதிக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து வக்ஃப் ரத்து மசோதா 2022 அறிமுகப்படுத்தப்பட்டது.

பா.ஜ.க. உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், மசோதாவை முன்வைத்த பா.ஜ.க. எம்.பி., நாட்டின் நலனுக்காகவே இம்மசோதா என்று குறிப்பிட்டார்.

Tags: ParliamentWakf boardact 1995
ShareTweetSendShare
Previous Post

கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம்!

Next Post

வெள்ளத்தில் வழிந்தோடிய ரூ.4000 கோடி – பொன். ராதாகிருஷ்ணன்

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies