நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா நகர மக்களுக்குத் தேவையான நிவாரண பொருள்களை இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன. ஆனால், இந்த மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், அந்நாட்டுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா நகரின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போய்க் கிடக்கின்றன.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்கள் என 18,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 30,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவிர, ஹமாஸ் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் என ஆயிரக்கணக்கான இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் பிணைக் கைதிகளை விடுத்த ஹமாஸ் தீவிரவாதிகள், அதே நேரத்தில் இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இத்தாக்குதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இந்தப் பொருட்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் தீவிரவாதத்துக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று கூறி இருக்கிறது.

Tags: HamasStealHumanitarian aid
ShareTweetSendShare
Previous Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Next Post

காங்கிரஸ் ஊழல் இல்லம்! – அண்ணாமலை

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies