நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Oct 25, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா நகர மக்களுக்குத் தேவையான நிவாரண பொருள்களை இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன. ஆனால், இந்த மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், அந்நாட்டுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா நகரின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போய்க் கிடக்கின்றன.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்கள் என 18,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 30,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவிர, ஹமாஸ் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் என ஆயிரக்கணக்கான இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் பிணைக் கைதிகளை விடுத்த ஹமாஸ் தீவிரவாதிகள், அதே நேரத்தில் இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இத்தாக்குதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இந்தப் பொருட்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் தீவிரவாதத்துக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று கூறி இருக்கிறது.

Tags: HamasStealHumanitarian aid
ShareTweetSendShare
Previous Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Next Post

காங்கிரஸ் ஊழல் இல்லம்! – அண்ணாமலை

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies