நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா நகர மக்களுக்குத் தேவையான நிவாரண பொருள்களை இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன. ஆனால், இந்த மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், அந்நாட்டுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா நகரின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போய்க் கிடக்கின்றன.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்கள் என 18,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 30,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவிர, ஹமாஸ் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் என ஆயிரக்கணக்கான இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் பிணைக் கைதிகளை விடுத்த ஹமாஸ் தீவிரவாதிகள், அதே நேரத்தில் இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இத்தாக்குதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இந்தப் பொருட்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் தீவிரவாதத்துக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று கூறி இருக்கிறது.

Tags: HamasStealHumanitarian aid
ShareTweetSendShare
Previous Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Next Post

காங்கிரஸ் ஊழல் இல்லம்! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies