நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரணப் பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 12:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா நகர மக்களுக்குத் தேவையான நிவாரண பொருள்களை இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன. ஆனால், இந்த மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், அந்நாட்டுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா நகரின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போய்க் கிடக்கின்றன.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்கள் என 18,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 30,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவிர, ஹமாஸ் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் என ஆயிரக்கணக்கான இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் பிணைக் கைதிகளை விடுத்த ஹமாஸ் தீவிரவாதிகள், அதே நேரத்தில் இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இத்தாக்குதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இந்தப் பொருட்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் தீவிரவாதத்துக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று கூறி இருக்கிறது.

Tags: HamasStealHumanitarian aid
Share
Tweet
SendShare
Previous Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Next Post

காங்கிரஸ் ஊழல் இல்லம்! – அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies