பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!
Sep 9, 2025, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் 50 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதோடு, 40 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) மண்டல மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூ. இவர், மிகப் பெரிய அளவில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவருக்குச் சொந்தமான ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

இச்சோதனையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கட்டுக்கட்டாக கரன்ஸிகள் வந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை மட்டும் 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிஸா மாநிலத்தின் பொலாங்கிரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 300 கோடி ரூபாய் இருந்தது. பெரும்பாலும் எல்லாம் 500 ரூபாய் கட்டுகள்தான்.

பணத்தை தொடர்ந்து எண்ணியதால், பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால், பல வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. இது தவிர, 3 இடங்களில் 7 அறைகளில் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. மேலும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முதலில் இந்தப் பணத்தை எண்ணி முடித்த பிறகு, இனி பறிமுதல் செய்யப்படும் பணத்தை எண்ண அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் மொத்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இச்சோதனையில் 150 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு, ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் பகத் பெஹரா கூறுகையில், “எங்களுக்கு 176 பைகள் கிடைத்தன. அவற்றில் 140 பைகள் எண்ணப்பட்டு விட்டன. மீதமுள்ளவை எண்ணப்பட்டு வருகின்றன. பணம் எண்ணும் பணியில் 3 வங்கிகளைச் சேர்ந்த 50 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

Tags: IT raidCongress MPMoneySBI bank
ShareTweetSendShare
Previous Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Next Post

குட்கா விளம்பரம் – பிரபல நடிகர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Related News

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies