பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!
Jul 25, 2025, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் 50 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதோடு, 40 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) மண்டல மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூ. இவர், மிகப் பெரிய அளவில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவருக்குச் சொந்தமான ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

இச்சோதனையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கட்டுக்கட்டாக கரன்ஸிகள் வந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை மட்டும் 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிஸா மாநிலத்தின் பொலாங்கிரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 300 கோடி ரூபாய் இருந்தது. பெரும்பாலும் எல்லாம் 500 ரூபாய் கட்டுகள்தான்.

பணத்தை தொடர்ந்து எண்ணியதால், பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால், பல வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. இது தவிர, 3 இடங்களில் 7 அறைகளில் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. மேலும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முதலில் இந்தப் பணத்தை எண்ணி முடித்த பிறகு, இனி பறிமுதல் செய்யப்படும் பணத்தை எண்ண அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் மொத்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இச்சோதனையில் 150 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு, ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் பகத் பெஹரா கூறுகையில், “எங்களுக்கு 176 பைகள் கிடைத்தன. அவற்றில் 140 பைகள் எண்ணப்பட்டு விட்டன. மீதமுள்ளவை எண்ணப்பட்டு வருகின்றன. பணம் எண்ணும் பணியில் 3 வங்கிகளைச் சேர்ந்த 50 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

Tags: MoneySBI bankIT raidCongress MP
ShareTweetSendShare
Previous Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Next Post

குட்கா விளம்பரம் – பிரபல நடிகர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies