பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் 50 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதோடு, 40 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) மண்டல மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூ. இவர், மிகப் பெரிய அளவில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவருக்குச் சொந்தமான ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

இச்சோதனையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கட்டுக்கட்டாக கரன்ஸிகள் வந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை மட்டும் 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிஸா மாநிலத்தின் பொலாங்கிரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 300 கோடி ரூபாய் இருந்தது. பெரும்பாலும் எல்லாம் 500 ரூபாய் கட்டுகள்தான்.

பணத்தை தொடர்ந்து எண்ணியதால், பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால், பல வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. இது தவிர, 3 இடங்களில் 7 அறைகளில் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. மேலும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முதலில் இந்தப் பணத்தை எண்ணி முடித்த பிறகு, இனி பறிமுதல் செய்யப்படும் பணத்தை எண்ண அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் மொத்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இச்சோதனையில் 150 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு, ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் பகத் பெஹரா கூறுகையில், “எங்களுக்கு 176 பைகள் கிடைத்தன. அவற்றில் 140 பைகள் எண்ணப்பட்டு விட்டன. மீதமுள்ளவை எண்ணப்பட்டு வருகின்றன. பணம் எண்ணும் பணியில் 3 வங்கிகளைச் சேர்ந்த 50 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

Tags: IT raidCongress MPMoneySBI bank
ShareTweetSendShare
Previous Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Next Post

குட்கா விளம்பரம் – பிரபல நடிகர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies