பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 07:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் 50 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதோடு, 40 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) மண்டல மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூ. இவர், மிகப் பெரிய அளவில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவருக்குச் சொந்தமான ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

இச்சோதனையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கட்டுக்கட்டாக கரன்ஸிகள் வந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை மட்டும் 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிஸா மாநிலத்தின் பொலாங்கிரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 300 கோடி ரூபாய் இருந்தது. பெரும்பாலும் எல்லாம் 500 ரூபாய் கட்டுகள்தான்.

பணத்தை தொடர்ந்து எண்ணியதால், பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால், பல வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. இது தவிர, 3 இடங்களில் 7 அறைகளில் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. மேலும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முதலில் இந்தப் பணத்தை எண்ணி முடித்த பிறகு, இனி பறிமுதல் செய்யப்படும் பணத்தை எண்ண அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் மொத்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இச்சோதனையில் 150 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு, ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் பகத் பெஹரா கூறுகையில், “எங்களுக்கு 176 பைகள் கிடைத்தன. அவற்றில் 140 பைகள் எண்ணப்பட்டு விட்டன. மீதமுள்ளவை எண்ணப்பட்டு வருகின்றன. பணம் எண்ணும் பணியில் 3 வங்கிகளைச் சேர்ந்த 50 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

Tags: IT raidCongress MPMoneySBI bank
Share
Tweet
SendShare
Previous Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Next Post

குட்கா விளம்பரம் – பிரபல நடிகர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies