சீனாவில் பெண்ணின் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மிரர் உடனடியாக குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார். இதையடுத்து கண்ணை பரிசோதனை செய்த போது அவரது இரு கருவிழிகளிலும் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இறுதியில் அவரது வலது கண்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும், இடது கண்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் மருத்துவர்கள் எடுத்தனர். மொத்தமாக அவரின் இரு கண்களிலும் இருந்து 60 க்கும் உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மருத்துவமனை அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பரிசோதனை செய்த போது, அப்பெண்ணின் கண் இமைகளுக்கு இடையில் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இந்த புழுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்த போது, அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் அதிகமான உயிருள்ள புழுக்களும், இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களும் அகற்றப்பட்டன ” என்று கூறினார்.
மேலும் அப்பெண்ணிற்கு புழுக்களை அகற்றும் செயல்முறையை மேற்கொண்டவர் டாக்டர் குவான் இதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” இப்படி இந்த பெண்ணிற்கு வட்டபுழுக்கள் தாக்கப்பட்டிருப்பதற்கு காரணம் செல்லப் பிராணிகளாக இருக்கலாம். ஏனெனில் அவர் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார் ” என்று கூறினார்.
எனவே இனிமேல் செல்லப்பிராணிகளிடம் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்கவும் அப்பெண்ணிற்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் குவான் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு புழுக்கள் கண்களில் இருந்து எடுக்கப்பட்டதால், அப்பெண்ணின் கண்ணில் லார்வாக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி பரிசோதனைக்கு வரும்படி மருத்துவர்கள் அப்பெண்ணிடம் வலியுறுத்தியுள்ளனர். முக்கியமாக செல்லப் பிராணிகளை தொட்ட பின் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுமாறும் கேட்டுக் கொண்டனர்.