பெண்ணின் கண்களிலிருந்து நீக்கப்பட்ட 60 உயிருள்ள புழுக்கள்!
Jul 31, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்ணின் கண்களிலிருந்து நீக்கப்பட்ட 60 உயிருள்ள புழுக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் பெண்ணின் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது.

இதனால்  அதிர்ச்சியடைந்த மிரர் உடனடியாக குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார். இதையடுத்து கண்ணை பரிசோதனை செய்த போது அவரது இரு கருவிழிகளிலும்  உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இறுதியில் அவரது வலது கண்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும், இடது கண்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் மருத்துவர்கள் எடுத்தனர். மொத்தமாக அவரின் இரு கண்களிலும் இருந்து 60 க்கும் உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மருத்துவமனை அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பரிசோதனை செய்த போது, அப்பெண்ணின் கண் இமைகளுக்கு இடையில் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இந்த புழுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்த போது, அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் அதிகமான உயிருள்ள புழுக்களும், இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களும் அகற்றப்பட்டன ” என்று கூறினார்.

மேலும் அப்பெண்ணிற்கு புழுக்களை அகற்றும் செயல்முறையை மேற்கொண்டவர் டாக்டர் குவான் இதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”  இப்படி இந்த பெண்ணிற்கு வட்டபுழுக்கள் தாக்கப்பட்டிருப்பதற்கு காரணம் செல்லப் பிராணிகளாக இருக்கலாம். ஏனெனில் அவர் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார் ” என்று கூறினார்.

எனவே இனிமேல் செல்லப்பிராணிகளிடம் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்கவும் அப்பெண்ணிற்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் குவான் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு புழுக்கள் கண்களில் இருந்து எடுக்கப்பட்டதால், அப்பெண்ணின்  கண்ணில் லார்வாக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி  பரிசோதனைக்கு வரும்படி மருத்துவர்கள் அப்பெண்ணிடம் வலியுறுத்தியுள்ளனர். முக்கியமாக செல்லப் பிராணிகளை தொட்ட பின் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுமாறும் கேட்டுக் கொண்டனர்.

 

Tags: eyedoctorswormsworms in eyeeye operationchina
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் சென்ற முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் !

Next Post

5 ஆண்டுகளில் 36,000 இணைய முகவரிகள் முடக்கம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies