மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!
Oct 26, 2025, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர், ஏற்கெனவே முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல்வராக இருந்து சிவராஜ் சிங் சௌஹானுக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால், மேற்கண்ட 3 மாநிலங்களிலுமே புதுமுகங்களை முதல்வராக பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதமானது. இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக, மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்தது.

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் குறித்து விவாதித்தனர்.

அப்போது, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவ், முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மத்திய பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் கூறுகையில், “நான் கட்சியில் ஒரு சாதாரணத் தொண்டன். என்னை முதல்வராகத் தேர்வு செய்த உங்களுக்கும், மாநிலத் தலைமை மற்றும் மத்தியத் தலைமைக்கும் எனது நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவுடன் எனது பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Tags: Madya PradeshCM candidateMohan Yadhav
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது! – அண்ணாமலை

Next Post

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies