மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர், ஏற்கெனவே முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல்வராக இருந்து சிவராஜ் சிங் சௌஹானுக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால், மேற்கண்ட 3 மாநிலங்களிலுமே புதுமுகங்களை முதல்வராக பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதமானது. இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக, மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்தது.

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் குறித்து விவாதித்தனர்.

அப்போது, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவ், முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மத்திய பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் கூறுகையில், “நான் கட்சியில் ஒரு சாதாரணத் தொண்டன். என்னை முதல்வராகத் தேர்வு செய்த உங்களுக்கும், மாநிலத் தலைமை மற்றும் மத்தியத் தலைமைக்கும் எனது நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவுடன் எனது பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Tags: Madya PradeshCM candidateMohan Yadhav
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது! – அண்ணாமலை

Next Post

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies