பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!
Oct 25, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், சட்டப்பிரிவு 370 சர்ச்சை முடிந்து விட்டது. இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இத்தீர்ப்பை வரவேற்று பேசியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வேதச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், மேற்கண்ட தீர்ப்பு காவி சித்தாந்தவாதியும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இத்தீர்ப்பின் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1947-48-ல் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட இணைப்புக் கடிதம் இறுதியானது, செல்லுபடியானது மற்றும் மாற்ற முடியாதது என்பதை இன்றைய தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சில அரசியல் தவறான புரிதல்கள் காரணமாக , அப்போதைய அரசியல் தலைமை ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி தடையின்றி தொடரும்.

தற்போது ஜம்மு காஷ்மீரில் முடிக்கப்படாத ஒரே செயல்திட்டம் பாகிஸ்தானின் பிடியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாகும். வலுவான இந்தியாவும், உறுதியான அரசாங்கமும் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: VHPArticle 370Alok KumarWorking President
ShareTweetSendShare
Previous Post

ரஜினிகாந்த் சிறந்த தேசியவாதி, பண்பாளர்! – அண்ணாமலை

Next Post

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies