பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!
Jul 26, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், சட்டப்பிரிவு 370 சர்ச்சை முடிந்து விட்டது. இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இத்தீர்ப்பை வரவேற்று பேசியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வேதச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், மேற்கண்ட தீர்ப்பு காவி சித்தாந்தவாதியும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இத்தீர்ப்பின் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1947-48-ல் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட இணைப்புக் கடிதம் இறுதியானது, செல்லுபடியானது மற்றும் மாற்ற முடியாதது என்பதை இன்றைய தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சில அரசியல் தவறான புரிதல்கள் காரணமாக , அப்போதைய அரசியல் தலைமை ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி தடையின்றி தொடரும்.

தற்போது ஜம்மு காஷ்மீரில் முடிக்கப்படாத ஒரே செயல்திட்டம் பாகிஸ்தானின் பிடியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாகும். வலுவான இந்தியாவும், உறுதியான அரசாங்கமும் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Article 370Alok KumarWorking PresidentVHP
ShareTweetSendShare
Previous Post

ரஜினிகாந்த் சிறந்த தேசியவாதி, பண்பாளர்! – அண்ணாமலை

Next Post

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies