பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!
Mar 15, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், சட்டப்பிரிவு 370 சர்ச்சை முடிந்து விட்டது. இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இத்தீர்ப்பை வரவேற்று பேசியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வேதச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், மேற்கண்ட தீர்ப்பு காவி சித்தாந்தவாதியும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இத்தீர்ப்பின் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1947-48-ல் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட இணைப்புக் கடிதம் இறுதியானது, செல்லுபடியானது மற்றும் மாற்ற முடியாதது என்பதை இன்றைய தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சில அரசியல் தவறான புரிதல்கள் காரணமாக , அப்போதைய அரசியல் தலைமை ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி தடையின்றி தொடரும்.

தற்போது ஜம்மு காஷ்மீரில் முடிக்கப்படாத ஒரே செயல்திட்டம் பாகிஸ்தானின் பிடியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாகும். வலுவான இந்தியாவும், உறுதியான அரசாங்கமும் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: VHPArticle 370Alok KumarWorking President
ShareTweetSendShare
Previous Post

ரஜினிகாந்த் சிறந்த தேசியவாதி, பண்பாளர்! – அண்ணாமலை

Next Post

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies