பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், சட்டப்பிரிவு 370 சர்ச்சை முடிந்து விட்டது. இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இத்தீர்ப்பை வரவேற்று பேசியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வேதச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், மேற்கண்ட தீர்ப்பு காவி சித்தாந்தவாதியும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இத்தீர்ப்பின் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1947-48-ல் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட இணைப்புக் கடிதம் இறுதியானது, செல்லுபடியானது மற்றும் மாற்ற முடியாதது என்பதை இன்றைய தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சில அரசியல் தவறான புரிதல்கள் காரணமாக , அப்போதைய அரசியல் தலைமை ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி தடையின்றி தொடரும்.

தற்போது ஜம்மு காஷ்மீரில் முடிக்கப்படாத ஒரே செயல்திட்டம் பாகிஸ்தானின் பிடியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாகும். வலுவான இந்தியாவும், உறுதியான அரசாங்கமும் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: VHPArticle 370Alok KumarWorking President
Share
Tweet
SendShare
Previous Post

ரஜினிகாந்த் சிறந்த தேசியவாதி, பண்பாளர்! – அண்ணாமலை

Next Post

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies