தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
Jul 26, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதுவரை மத்திய அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமித்து வருகிறார். ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக சட்டம் இயற்றவும், அதுவரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கி குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்றும் கூறி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய சூழலில் அம்மசோதா மீதான விவாதத்தை நடத்த இயலவில்லை.

எனவே, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில், தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி வரையறை, பணிக் காலம், தேர்தல் ஆணைய பணி செயல்முறை உள்ளிட்டவை தொடர்பான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

புதிய மசோதாவில், பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் நபர் என 3 பேர் அடங்கி குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுவின் பரிந்துரைகளின் படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த 3 பேர் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் நபர் இடம் பெறுவதால், தேர்தல் ஆணையர் தேர்வில் அரசின் ஆதிக்கம் இருக்கும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லாத சூழல் நிலவும் என்றும் கூறப்பட்டது.

எனவே, தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை கண்டித்து எதிர்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தன. இதன் பிறகு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.

Tags: Jagdeep DhankarSpeakerElection commissioner
ShareTweetSendShare
Previous Post

900 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.22 அடியாக அதிகரிப்பு!

Related News

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞரின் புகைப்படம் வெளியீடு!

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

சென்னை : பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies