தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
Jun 12, 2026, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதுவரை மத்திய அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமித்து வருகிறார். ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக சட்டம் இயற்றவும், அதுவரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கி குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்றும் கூறி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய சூழலில் அம்மசோதா மீதான விவாதத்தை நடத்த இயலவில்லை.

எனவே, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில், தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி வரையறை, பணிக் காலம், தேர்தல் ஆணைய பணி செயல்முறை உள்ளிட்டவை தொடர்பான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

புதிய மசோதாவில், பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் நபர் என 3 பேர் அடங்கி குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுவின் பரிந்துரைகளின் படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த 3 பேர் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் நபர் இடம் பெறுவதால், தேர்தல் ஆணையர் தேர்வில் அரசின் ஆதிக்கம் இருக்கும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லாத சூழல் நிலவும் என்றும் கூறப்பட்டது.

எனவே, தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை கண்டித்து எதிர்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தன. இதன் பிறகு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.

Tags: Election commissionerJagdeep DhankarSpeaker
ShareTweetSendShare
Previous Post

900 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.22 அடியாக அதிகரிப்பு!

Related News

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies