2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!
Jan 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக, அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி சாதனை படைத்தது. தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத், திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில், “நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இது, 14 புவி நாட்களில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.

இத்திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ம் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அனுப்பப்பட்டிருக்கிறது.

இது சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உட்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.

இது தற்போது பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் இணைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து, விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி, 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வரும் 2025-ம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. 2040-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

2023 – 2024-ம் ஆண்டுகளில் எக்போசாட் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. இது இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். ஸ்பேடக்ஸ் என்ற அறிவியல் பூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும். இது ஜனவரி 3-வது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும், 2035-ம் ஆண்டில் “இந்திய விண்வெளி நிலையம்” தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை உறுதிப்படுத்த வெள்ளிக்கோளின் சுற்று வட்டப்பாதை ஆய்வுத் திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருக்கிறார்.

ஆகவே, இந்தியாவின் விண்வெளித் திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்டத் தயாராக இருக்கிறது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேசிய பெருமையைத் தூண்டுகிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது” என்றார்.

 

Tags: ISROChairmanSomnath
ShareTweetSendShare
Previous Post

விஜய் ஹசாரே அரையிறுதி : தமிழகம் – அரியானா!

Next Post

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதலில் விரைவான விசாரணை! -எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies