2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!
Sep 9, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக, அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி சாதனை படைத்தது. தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத், திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில், “நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இது, 14 புவி நாட்களில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.

இத்திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ம் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அனுப்பப்பட்டிருக்கிறது.

இது சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உட்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.

இது தற்போது பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் இணைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து, விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி, 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வரும் 2025-ம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. 2040-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

2023 – 2024-ம் ஆண்டுகளில் எக்போசாட் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. இது இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். ஸ்பேடக்ஸ் என்ற அறிவியல் பூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும். இது ஜனவரி 3-வது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும், 2035-ம் ஆண்டில் “இந்திய விண்வெளி நிலையம்” தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை உறுதிப்படுத்த வெள்ளிக்கோளின் சுற்று வட்டப்பாதை ஆய்வுத் திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருக்கிறார்.

ஆகவே, இந்தியாவின் விண்வெளித் திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்டத் தயாராக இருக்கிறது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேசிய பெருமையைத் தூண்டுகிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது” என்றார்.

 

Tags: ISROChairmanSomnath
ShareTweetSendShare
Previous Post

விஜய் ஹசாரே அரையிறுதி : தமிழகம் – அரியானா!

Next Post

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதலில் விரைவான விசாரணை! -எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies