2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இம்மசோதை தோல்வியடைந்தது. இதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது. அப்போது, இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா  நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் பின்னர், இம்மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாக்கப்பட்டது. எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்த பிறகே, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய நித்யானந்த் ராய், “முகலாயர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு உரிய மரியாதையும், சரியான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தங்களின் அறிவு மற்றும் திறமையால் பெண்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்” என்றாா். இதைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

Tags: ParliamentWoman reservationNityanad rai
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்! – சபாநாயகர் ஓம் பிர்லா

Next Post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies