2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!
Jun 17, 2025, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இம்மசோதை தோல்வியடைந்தது. இதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது. அப்போது, இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா  நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் பின்னர், இம்மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாக்கப்பட்டது. எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்த பிறகே, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய நித்யானந்த் ராய், “முகலாயர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு உரிய மரியாதையும், சரியான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தங்களின் அறிவு மற்றும் திறமையால் பெண்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்” என்றாா். இதைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

Tags: Nityanad raiParliamentWoman reservation
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்! – சபாநாயகர் ஓம் பிர்லா

Next Post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு!

Related News

ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை, 2.2 கிலோ வெள்ளி, ரூ.21 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது!

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய உறவினர் – அதிர்ச்சி வீடியோ!

பொள்ளாச்சி : அரசு நடுநிலை பள்ளியில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெளியே சாலை மறியல்!

மேற்கு ஆசியாவின் எதிர்காலம்? : இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

இன்றைய தங்கம் விலை!

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி நிதி பெற முடியும் – பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா!

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies