2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இம்மசோதை தோல்வியடைந்தது. இதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது. அப்போது, இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா  நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் பின்னர், இம்மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாக்கப்பட்டது. எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்த பிறகே, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய நித்யானந்த் ராய், “முகலாயர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு உரிய மரியாதையும், சரியான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தங்களின் அறிவு மற்றும் திறமையால் பெண்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்” என்றாா். இதைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

Tags: ParliamentWoman reservationNityanad rai
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்! – சபாநாயகர் ஓம் பிர்லா

Next Post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies