தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது - ரோஹித் சர்மா!
Jan 14, 2026, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது – ரோஹித் சர்மா!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியைக் குறித்து முதல் முறையாக ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் லீக் சுற்றில் நடைபெற்ற 9 போட்டிகளில் 9 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.

அரையிறுதி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு தகுதி பெற்றது. அனைவரும் இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இந்தியா அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியா தோல்வியடைந்த உடனே மைதானத்திலே சில வீரர்கள் அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா உலகக்கோப்பையைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது அணியின் தோல்வியைக் குறித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், ” உலகக்கோப்பை தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான யோசனை என்னிடம் இல்லை. முதல் சில நாட்களில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சமயங்களில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருந்தது ஓரளவு ஆறுதலாக இருந்தது. இந்த தோல்வியை ஜீரணிப்பது எளிதல்ல. ஆனால் வாழ்க்கை நகர்வதால் நாமும் வாழ்க்கையுடன் நகர வேண்டும்.

உண்மையாகத் தோல்வியிலிருந்து நகர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் 50 ஓவர் உலகக்கோப்பையைத் தான் அதிகமாகப் பார்த்து வளர்ந்தேன். 50 ஓவர் உலகக்கோப்பை என்பதுதான் நான் வெல்ல விரும்பிய மிகப்பெரிய பரிசு. இதற்காகக் கடந்த பல வருடங்களாக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

அதனால் இப்போது அதை நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது. ஏனெனில் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வெற்றிக்காகச் செய்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகள் பெற்றதை தான் நான் சொல்வேன்” என்று கூறினார்.

Tags: rohith sharmaindian cricket player
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா – களைகட்டிய மேல்மலையனூர்!

Next Post

ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ – என்ன காரணம் தெரியுமா?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies